Saturday, November 26, 2011

நான் ஒரு முட்டாளுங்க!-3

நாங்க இந்தப் பட்டிணத்துக்கு புதுசுங்க. “ந்ல்ல CSI கோயில்லே சேந்துக்கோ,”ன்னு எங்க ஊரு உபதேசியாரு சொல்லி அனுப்பினாருங்க. குடும்பத்த கூட்டிகிட்டு மூணு வாரமா வெவ்வேறு CSI கோயிலுக்கா போனேங்க இது நாலாவது வாரம்; நாலாவது கோயிலுங்க. எங்கள “வா”ன்னு கூட யாரும் கூப்பிடலேங்க. சபையாருங்க அவுங்களுக்குளே நல்லாத்தான் பேசிக்கிராங்க ஆனா எங்களப் பாத்து சிரிக்கக்கூட மாட்டேங்கிராங்க.. நல்லா பாட்டெல்லாம் பாடுறாங்க எங்கிட்டே பாட்டு புத்தகமில்லே; என் பக்கத்திலிந்தவர் புத்தகம் காட்டியிருந்தா நானும் பாடியிருப்பேங்க. ஐயர் பிரசங்கம் ரொம்ப நல்லா இருந்துச்சு; ஆனா பாதிதான் விளங்கிச்சு; மீதி இங்கிலீசுங்க. கோயில் முடிஞ்சபிறகு ஐயர பாத்து தோத்திரம் பண்ணி ஊருக்கு புதுசுங்கன்னு சொன்னேங்க. “அப்படியா தம்பி, சந்தோஷம்!” னு சொல்லிட்டு போயிட்டாரு. அவருக்கு என்ன அவசரமோ, பாவம்! நாங்க குடும்பமா அங்கேயே நின்னுகிட்டிருந்தோங்க. மக்களேல்லாம் கூடிக் கூடி நின்னு பேசினவுங்க கொஞ்சம் கொஞ்சமா கலைஞ்சு போயிட்டாங்க. எங்கள யாருமே கண்டுக்கலேங்க. நான் ஒரு முட்டாளுங்க! எனனதான் கிறிஸ்தவங்களானாலும் பொழைக்க பட்டிணம் வந்தவுங்ககிட்டே குசலம் பேசுவாங்கனு நாம எதிர்பார்க்கலாமுங்களா? ஹும்… அடுத்த வாரம் வேறே கோயிலுக்கு போயி பர்க்க வேணடியதுதாங்க! எங்கள மாதிரி முட்டாளுங்க உங்க கோயிலுக்கும் வருவாங்க. தயவு பண்ணி அவுங்க கிட்டே கொஞ்சம் சிரிச்சு பேசுங்க; அவுங்க ரொம்ப சந்தோஷப் படுவாங்க.

No comments:

Post a Comment