Saturday, November 26, 2011

நான் ஒரு முட்டாளுங்க - 2

கோவிலுக்கு முந்தியே வந்து நல்ல இடமா பாத்துதான் உக்காந்தேங்க. பிந்தி வந்தவுங்களுக்கு இடம் கொடுக்கலாம்னு கொஞ்சம் கொஞ்சமா நகுந்து இப்போ ஒரு தூணுக்குப் பின்னாலே உக்காந்திருக்கேங்க. இங்கேயிருந்து ஆல்டரும் தெரியலே ஐயரும் தெரியலே; இங்கே காத்துகூட இல்லே. பிந்திவந்தவுங்க வசதியா சாமி கும்பிடுராங்க. நாந்தான் மூலையிலே மாட்டிகிட்ட முட்டாளாயிட்டேன். பரவாயில்லேங்க; கோவிலுக்குள்ளேயே மத்தவுங்களுக்கு விட்டுக்கொடுக்காட்டி வேறே எங்கேங்க விட்டுகொடுக்கப் போறோம்,சொல்லுங்க.

No comments:

Post a Comment